"நான் தான் சொன்னேன் இல்ல? வெளிய யாருமே இல்ல..." என்றவள் அவன் அருகில் அமர,
"அது எனக்கும் தெரியும்..." என்று குஷா மர்மமாகச் சிரிக்க,
"அப்பறோம் எதுக்கு டா என்னைப் பார்க்கச்சொன்ன?"
"அப்பறோம் டோரை யாரு சாத்துவா?" என்று சொல்லி அவளைச் சுற்றி தன் கையை உலாவ விட,
இதுவரை இருந்த தைரியம் விலக்கியவளாக மொட்டு படபடக்க,
"மொட்டு இப்போ உனக்கு என் மேல எந்தக் கோவமும் இல்ல தானே?"
"ஏன்..." என்று சொன்னாலும் அவளுக்கு காற்று தான் வந்தது.
"இல்ல உன் சம்மதத்தோட நம்ம லைஃபை ஸ்டார்ட் பண்ணலாமா?"
அதில் அதிர்ந்தவள் எழுந்து,"அது நான் படிக்குறேன். டிகிரி முடிச்சு..."
"என்னது டிகிரி முடிஞ்சா? ஏய் நீ பாட்டுக்கு அரியர் வெச்சிட்டு வருஷக்கணக்கா எழுதிட்டு இருப்ப. நான் என்னடி பண்ணறது?"
"என்ன நெனச்ச என்னைப் பத்தி? இந்த வாட்டி எல்லாமே ஒரே அட்டெம்ப்ட் தான். வெய்ட் அண்ட் வாட்ச்" என்று குரல் உயர்த்த,
"மொட்டு, உண்மையாவே டைம் வேண்டுமாடி?" என்று கேட்டவனின் குரலில் என்ன உணர்ந்தாளோ,
"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா பேபி வந்துட்டா..." என்று அவள் இழுக்க,
"அப்போ கன்சீவ் ஆகிடுவேன்னு தான் உனக்கு பயமா? நோ ப்ராப்லம். ஐ வில் டேக் கேர்..." என்றவன் தங்கள் இல்லறத்தில் முதலடியை எடுத்து வைக்க மனம் நிறைய காதலோடு தங்கள் வாழ்க்கையின் முதல் அத்தியாயத்தை எழுதினார்கள்.
கடந்த சில வாரங்களாக அதீத மனவுளைச்சலில் தத்தளித்தவன் அவற்றுக்கெல்லாம் விடுதலை கொடுத்துக்கொண்டிருந்தான்.
வெளியே லவாவும் அனுவும் நடந்த அனைத்தையும் ரகுவிடமும் ஜானகியிடமும் சொல்லி முடிக்க அவர்களுக்குத் தான் அதிகப்படியான வருத்தம் இருந்தது. பின்னே எத்தனை முறை லவா அனு வாழ்க்கையைப் பற்றி மொட்டு குஷாவிடம் வெளிப்படையாகவே வருத்தப்பட்டு உரையாடி உள்ளார்கள்?
ரகுவும் ஜானகியும் யோசனையில் இருக்க சிந்தையில் உதிர்த்தவராக அனுவை அழைத்து வாழ்த்து கூறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
மறுநாள் காலை வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் தயாரான மொட்டு வெளியேற அவளுக்காகவே காத்திருந்த ரகு,
"மொட்டு இங்க வா மா..." என்று அழைத்தவர்,
"சாரி. நான் நேத்து கொஞ்சம் ஓவரா..." என்று தொடங்கியதும்,
"என்கிட்ட நீங்க எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம் மாமா. எனக்கு உங்க மேல எந்தக் கோவமும் இல்ல. குஷா தான் ரொம்ப வருத்தப்பட்டான். அவனுக்கு நீங்கனா அவ்வளவு பிடிக்கும் மாமா. இதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. அவன் கிட்ட நீங்க எப்பயும் போல பேசுனாவே போதும். ரொம்ப ஹர்ட் ஆகிட்டான். பேசுவீங்களா மாமா?"
"இதெல்லாம் என்கிட்ட நீ கேட்கணுமா? அவன் மேல எந்தத் தப்பும் இல்ல. நானே பேசுறேன். அவன்கிட்ட எனக்கென்ன ஈகோ?" என்று எழுந்தவர் ஓரடி எடுத்து வைக்க,
"அப்போ நான் ஒன்னு கேட்டா எனக்காக அதைச் செய்விங்களா மாமா?"
"என்ன இப்படிக் கேட்டுட்ட? என்ன செய்யணும் சொல்லு?" என்று சொல்லும் வேளையில் லவா அனு குஷா ஆகியோர் அங்கே வர,
"இந்த முறை எங்க கூட சூரக்கோட்டைக்கு வாங்க மாமா. தாத்தா உங்ககிட்டப் பேசணும்னு சொன்னார் மாமா. நீங்க யார்கிட்டயும் இறங்கிப் போக வேண்டாம் மாமா. இன்னும் சொல்லனும்னா நீங்க வரேன்னு சொன்னா நான் என் அப்பாவைக் கூட வெளியூருக்கு எங்கயாச்சும் போகச் சொல்லிடுறேன். தாத்தா பாவம் மாமா. அவரோட கடைசி காலத்திலாவது அவருக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கட்டும் மாமா ப்ளீஸ். இங்க அத்தையும் பாவம் மாமா. உங்களுக்கு உங்க பையன் மேல பாசம் இருந்தா அவருக்கும் அவர் பொண்ணு மேல பாசம் இருக்கும் தானே? எனக்காகக் கூட நீங்க இதைச் செய்ய வேணாம். அட்லீஸ்ட் அத்தைக்காக ப்ளீஸ் மாமா..." என்று நிறுத்த,
லவா குஷா அனு மூவரும் எதிர்பார்ப்பாக ரகுவை நோக்க ஜானகி மட்டும் இதையெல்லாம் கேட்டும் கேட்காதது போல் சமையலில் தீவிரமாக இருக்க அவரையே சிறிது நேரம் பார்த்த ரகு,
"சரி போலாம் மா. நெக்ஸ்ட் வீக் எண்ட் நாம எல்லோரும் சூரக்கோட்டைக்குப் போறோம். அதுக்கேத்த மாதிரி எல்லோரும் அவங்க ஒர்க்கை பிளான் பண்ணிக்கோங்க..." என்றதும் லவா குஷா இருவரும் தங்கள் தந்தையை இருபுறமாக அணைத்துக்கொண்டனர். பிறகு குஷாவிடம் சிறிது மனம் விட்டுப் பேசினார் ரகு.
அங்கே மொட்டுவிடம் தன்னுடைய நன்றியை உரைத்த ஜானகிக்கு,"இதுல முழுக்க முழுக்க சுயநலம் தான் இருக்கு" என்று சிரித்தவளின் வதனத்தில் இருந்த பொலிவு அவருக்கு மேலும் நிறைவைக் கொடுத்தது.
*************
திட்டமிட்டபடியே அவர்கள் சூரக்கோட்டைக்குச் செல்ல நந்தாவையும் அங்கேயே இருக்குமாறு சொன்ன ரகுவின் எண்ணம் எல்லோருக்கும் புரிந்தது. அங்கே சென்றதும் இவர்களுக்கு முன் கூடியிருந்த பாரி, ரித்து, அபி, இசை, மனோ, இனி ஆகியோரைக் கண்டு லவா குஷா அனு மொட்டு ஆகியோர் துள்ளி குதிக்க நீண்ட நாட்கள் கழித்து நடக்கும் கெட் டுகெதரில் அவர்கள் ஆர்ப்பரித்தனர்.
உள்ளே சென்ற மொட்டு தன் அம்மா அத்தைகள் ஆகியோரிடம் வம்பு வளர்த்தாள். எல்லோரும் அனுவுக்கு வாழ்த்து கூறி அப்படியே மொட்டுவைப் பார்க்க, அவளோ
"அம்மா கன்னு போட்டிருக்கா மாடு? சீம்பால் எங்க?" என்றதும்,
"ஏய் நாங்க உன் குழந்தையைப் பத்தி கேட்டா நீ மாடு கன்னைப் பத்தி பேசுற?" என்ற கனகாவிடம்,
"அப்பத்தா நான் இப்போ கூட ரெடி தான். உன் பேரன் தான் பி.எச்.டி முடிச்சிட்டு பார்த்துக்கலாம்னு சொல்லிட்டான். நானும் உன் மக மாதிரி ரெட்டை பிள்ளை பெத்துடுறேன். கணக்கு டேலி ஆகிடும் ஓகே வா?" என்றதும் சித்ரா அவள் தலையில் கொட்டு வைக்க,
"இன்னையோட நம்ம வீட்ல எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சி லா லா லா பி ஜி எம் பாடிடலாம் ஓகேவா?" என்றதும் பெண்கள் புரியாமல் பார்க்க,
"தாத்தாவும் மாமாவும் பேசப்போறாங்க" என்றாள். இந்த விஷயம் மற்ற யாருக்கும் தெரியாது என்பதால் எல்லோரும் மகிழ கனகாவோ அதிகம் மகிழ்ந்தார்.
அப்போது குஷா நந்தாவிடம் எதையோ பேச அதைக் கண்ட மொட்டு அவர்களிடம் நெருங்கும் முன்னே நந்தா மாடியேறினார்.
"என்ன பேசுன குஷா உன் மாமனார் கிட்ட?"
"மேல அப்பாவைப் பார்க்க அனுப்பினேன்"
"குஷா?"
"பயப்படாத... அப்பா கண்டிப்பா மாமாவையும் மன்னிப்பார். அவங்க மட்டும் எதுக்கு பேசாமலே இருக்கனும்?"
"ஆனா மாமா?"
"எல்லாம் சரியாகிடும். அதை விடு, இந்த சேரீல சும்மா லைக்ஸ் அள்ளுது..."
"ஏய் யார் காதுலயாவது விழப்போகுது..." என்று அவள் சுற்றிமுற்றிப் பார்க்க அப்போது மனோ அங்கே இருக்க குஷாவை முறைத்தவாறு அவனிடம் பேசினாள். அவனும் குஷாவை அர்த்தமாகப் பார்த்து,
"எப்படி இருக்கீங்க மாமா. கொஞ்சம் வேலை இருக்கு வரேன்" என்று நகர மொட்டுவோ அவன் செய்கை புரியாமல் விழிக்க,
"நீ அன்னைக்கு என்னை விரும்புனேனு சொன்னது பொய்னு அவனுக்குத் தெரியும். அப்போ ஒரு வாக்கு கொடுத்தேன் அவனுக்கு. அதான் உரிமையா மாமான்னு சொல்லிட்டுப் போறான்..." என்றதும் திகைத்தவள்,
"அப்போ அவனுக்கு?"
"நான் உன்னை விரும்புறேன்னு தெரியும்"
"டேய் அப்போ எத்தனை பேர் டா இதுல கூட்டுக் களவாணி?"
"என்னது டேயா?"
"ஆமா இது பகல் தானே?"
"நீ பகல்ல டே டேன்னு சொல்றதுக்கெல்லாம் ராத்திரி பனிஷ்மென்ட் உண்டு பார்த்துக்கோ..."
அங்கே அனுவும் லவாவும் தாங்கள் காதல் வளர்த்த அறைக்குள் நுழைய(அதாங்க அவங்க ஒர்க் பிரம் ஹோம் செய்த அறை),
"ஹே புஜ்ஜு இந்த இடம் ஞாபகம் இருக்கா? இங்க தான் உன்ன முதன் முதல சைட் அடிச்சேன்..." என்று முடிப்பதற்குள்,
"அப்போ நீ முதன் முதலா யாரை எங்க எப்போ சைட் அடிச்ச? அப்போ இதையே பொழப்பா வெச்சிருக்க இல்ல?" என்று அனு கேட்டதும்,
"தாயே! தெரியாம உன்கிட்ட வாயை விட்டுட்டேன். என்னை ஆளை விடு..." என்று நகர முயன்றவனை இழுத்தவள்,
"லவா, நான் ஒன்னு கேப்பேன். இல்ல வேணாம்..."
"அனு, என் வாழ்க்கையில நீ முதல் காதலா இருப்பதைக் காட்டிலும் என்னுடைய கடைசி காதலா இருக்கனும். இருக்க. இருப்ப... சாரி பார் எவெரி திங்..." என்றவன் அவளை அணைத்து இதழ் நோக்கி குனிய,
"அனு..." என்ற குரலோடு உள்ளே வந்த கனகா அவர்களைக் கண்டு(அதற்குள் அவர்கள் முன்பிருந்த நிலைக்கு வந்துவிட)
"இங்க என்ன பண்ற? லவா மேல போங்க. ஜானகி உங்களைக் கூப்பிட்டா" என்றார்.
அசடு வழிந்தவாறே அவர்கள் செல்ல அதை உணர்ந்தவர் தனக்குள் சிரித்தபடி வெளியே வர,
"என்ன ம்மா சிரிப்படியே வர?" என்ற நிம்மிக்கு,
"பிள்ளைங்களுக்கு எல்லாம் இறங்கு பொழுதுல சுத்திப்போடணும். ஞாபகப்படுத்து..." என்று சென்றார்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு மேலே அறைக்கதவு திறக்கப்பட ரகுவின் கையைப் பிடித்தபடி முகம் கொள்ளா சிரிப்புடன் வெளியே வந்தார் வைத்தியலிங்கம். ரகுவிற்கு மறுபுறம் நந்தாவும் புன்னகையுடன் வர கீழே இருந்தே அதைக் கண்ட எல்லோருக்கும் நிறைவாக இருந்தது. ஜானகிக்கு மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட,
"பெரியம்மா வை க்ரையிங்? ஆல் ஈஸ் வெல்..." என்றாள் மெல்லினி.
"இந்த ஒரு காட்சிக்காக என் பொண்ணு எத்தனை வருஷம் கனவு கண்டிருப்பா தெரியுமா? வாயை மூடுடி..." என்றார் கனகா.
"நீங்க பண்ற அலும்பெல்லாம் பார்த்து கடைசியில எ பிலிம் பை பாரதி ராஜான்னு யாராச்சும் எண்ட் கார்ட் போட்டுடப்போறாங்க..." என்றதும் அனிச்சையாக மொட்டுவுக்கு புரையேற அவள் எதிரில் விஷமத்துடன் அமர்ந்திருந்தான் லவா.
"என்ன மொட்டு நம்ம சீனை ரீ-க்ரியேட் பண்ணிடலாமா?" என்று அருகிலிருந்த குஷாவைக் காட்டிக் கேட்க,
"நான் ரெடி..." என்று அதே கிண்டலுடன் மொட்டுவும் உரைக்க அருகிலிருந்த சிறுசு முதல் பெருசு வரை ஒன்றும் விளங்காமல் பார்த்தனர்.
நீண்ட வருடங்கள் கழித்து வீடு நிறைய மக்களும் மகிழ்ச்சியும் வழிந்தோட வைத்தியலிங்கம் கனகா தம்பதியினர் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று வந்தார்கள்.
அதன் பின்னர் அனுவை சில நாட்கள் தங்களோடு வைத்திருக்க கனகாவும் காவேரியும் விரும்ப லவாவையும் சில நாட்கள் இங்கேயே இருக்குமாறு சொல்லிவிட்டு குஷா மொட்டுவுடன் ஜானகியும் ரகுவும் கிளம்பி இருந்தனர்.
அதன் பின் வந்த ஆறு மாதங்கள் மிக வேகமாக உருண்டோடியது. லவா மீண்டும் சென்னைக்கு வந்திருக்க தீசிஸ் முடியும் வரை அவனை ஓய்வில் இருக்குமாறு ரகுவும் ஜானகியும் வற்புறுத்த வேறு வழியின்றி அவனும் ஒப்புக்கொண்டான். அவன் ஓய்வில் இருந்ததால் குஷாவிற்கு சற்று வேலை பளு குறைய தங்களின் தீசிஸ் ரிப்போர்ட்டை தாக்கல் செய்திருந்தனர். அவை ஏற்கப்பட்டு கிட்டத்தட்ட பி.எச்.டி பட்டமும் கிடைக்க இருந்தது.
அவர்களின் திருமணத்தை தான் ஊர் கூட்டி செய்ய முடியவில்லை என்றாலும் அவர்களின் பட்டமளிப்பு விழாவை ஆடம்பரமாக நடந்த ஏற்பாடு செய்திருந்தார்.(பொதுவாக இந்த விழா முழுக்க முழுக்க பி.எச்.டி வாங்குபவரைச் சார்ந்தது)
அன்று காலை முதல் அந்த அரங்கம் பரபரப்பாக இருக்க லவா குஷா தங்கள் கல்லூரி நண்பர்கள் காலேஜ் ப்ரொபெஸர்ஸ் கொலீக்ஸ் ஆகியோரை அழைத்திருக்க ரகு ஜானகி அனு மொட்டு ஆகியோர் தங்கள் நட்பு வட்டத்தை அழைத்திருந்தனர்.
மேடையில் தங்களுடைய தீஸிஸை சகோதரர்கள் இருவரும் விளக்கிக்கொண்டிருக்க கீழே அமர்ந்திருந்தவர்களில் வெகு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும்(நான் என் சித்தியோட விழாவுல அப்படித்தானே உட்கார்ந்திருந்தேன்?) அமைதியாக அவர்கள் விளக்குவதைப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
இறுதியில் அங்கு மேடையில் இருந்த சிலர் சில சம்பிரதாயக் கேள்விகளை இருவரிடமும் கேட்க அவர்களும் நீண்ட விளக்கத்துடன் பதிலளிக்க இறுதியில் அங்கிருந்த ஒரு மரியாதைக்குரிய நபர்,"மிஸ்டர் ஆர்வலன் ரகுநாத் அண்ட் மிஸ்டர் ஆழியன் ரகுநாத் வில் ஹென்ஸ் போர்த் பி நோன் ஏஸ் டாக்டர் ஆர்வலன் ரகுநாத் பி.எச்.டி அண்ட் டாக்டர் ஆழியன் ரகுநாத் பி.எச்.டி..." என்று முடிக்க அரங்கம் முழுவதும் கரகோசங்களில் நிறைந்தது. முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஜானகி ரகுநாத் அனு மொட்டு மற்றும் இதர குடும்பத்தினர் முகத்தில் ஆனந்தம் நிரம்பி வழிந்தது.
விழா முடிந்ததது வந்திருந்தவர்களை சாப்பிட அழைத்துச்சென்ற லவா குஷா எல்லோருடைய வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டனர். சிறிது நேரத்தில் அனுவைத் தேடி வந்த லவா,"ஹே புஜ்ஜு என்ன டையர்டா இருக்கா? வேணுனா பாரி கூட வீட்டுக்குப் போயிடுறியா?" என்று எட்டு மாதம் நிறைவடைந்த அனுவை ஆதுரத்துடன் விசாரிக்க,
"அதெல்லாம் வேணாம். நான் பாத்துக்கறேன். நீ வந்தவங்கள ஒழுங்கா கவனி..." என்றாள்.
"இந்த குஷா பையனை வேற ரொம்ப நேரமா ஆளைக் காணோம். ப்ரொபெஸர் எல்லாம் சாப்பிட்டதும் கிளம்பிடுவாங்க... எங்க போய்த் தொலைஞ்சானே தெரியில..." என்னும் போது தான் மொட்டுவையும் காணவில்லை என்று உணர்ந்து கோபத்துடன் உள்ளே விரைந்தான் லவா.
அங்கே ஒரு தூணில் ஒய்யாரமாக சாய்ந்தவாறு மொட்டுவிடம் கதை பேசிக் கொண்டிருந்த குஷாவைக் கண்டவன் அவர்கள் முன்பு கைகளைக் கட்டியபடி நின்ற லவாவைக் கண்டவன்,
"ஹே பிரதர் இங்க என்ன பண்ற? போய் கெஸ்ட்டை கவனிக்கல?" என்றவனுக்கு,
"ஓஒ அப்போ துரை என்ன பண்ணறீங்க?"
"பார்த்தா தெரியில காதல் பண்றோம் மேன்..."
"அப்போ எல்லா வேலையும் இழுத்துபோட்டுச் செய்ய நான் என்ன முட்டாளா?"
"டேய் உனக்கும் எனக்கும் இருபது நிமிஷம் தான் வித்தியாசம். அதே மாதிரி நமக்கு ரெண்டு நிமிஷ கேப்ல தான் கல்யாணம் ஆச்சு. ஒரே நேரத்துல டாக்டர் பட்டமும் வாங்கிட்டோம். ஆனா நீ காதல் பண்ணி கல்யாணம் பண்ணி இப்போ அப்பாவும் ஆகப் போற... என்னை எடுத்துக்கோ? எனக்கு கல்யாணம் மட்டும் தான் முடிஞ்சிருக்கு. இனிமேல் தான் காதல் பண்ணி குழந்தை..." என்று முடிக்கும் முன்னே மொட்டு அவன் மார்பில் குத்தியிருக்க,
"சோ நான் இப்போ பிஸி. நீ போய் வேலை பாருடா..." என்று நக்கலாக உரைத்தான் குஷா.
"ஏய் மொட்டு இதெல்லாம் நீ கேக்க மாட்டியா டி?" என்ற லவாவுக்கு,
"அவன் கேக்குறதுல என்ன தப்பிருக்கு? அவன் பாயிண்டா தானே பேசுறான். இன் பேக்ட் எங்களுக்குத் தானே முதல கல்யாணம் ஆச்சு..." என்று அவளும் தன் பங்கிற்கு லவாவை வெறுப்பேத்த,
"ஜாடிக்கேத்த மூடி தான்... எம்மா தாயே தயவு பண்ணி உன் புருஷனை என் கூட அனுப்பு. அவனை நான் பத்திரமா கொஞ்ச நேரத்துல அனுப்பி விடுறேன். அப்பறோம் நீங்க நாள் முழுக்க ரொமான்ஸ் பண்ணுங்க. ஆனா இப்போ அவன் வரணும்..." என்று குஷாவின் கையை இழுத்துச் சென்றான் லவா.
மொட்டு இப்போது தான் மூன்றாவது செமெஸ்டரில் இருக்கிறாள். அன்றைய மாலை நேரத்தில் உறவுகள் முழுவதும் தங்கள் வீட்டில் குழுமியிருக்க பிள்ளைகள் அனைவரும் கார்ட்ஸ் விளையாடி பொழுதைக் கழித்தனர்.
அடுத்த மாதத்தில் ஒரு முகூர்த்த நாளில் அனுவுக்கு வளைகாப்பு நடத்தி சூரக்கோட்டைக்கு அழைத்துச் செல்ல ஒரு நன்னாளில் அனுவை உரித்து வைத்தது போல் ஒரு மகன் பிறந்தான் லவா அனுவின் தவப்புதல்வன் வசீகரன்.
லவாவும் குஷா பணிபுரியும் கல்லூரியிலே ப்ரொபஸராக சேர்ந்திருந்தான். மொட்டு தன்னுடைய எம்.எஸ்.சியை வெற்றிகரமாக எண்பது சதவீதம் பெற்று அரியர் இல்லாமல் முடித்திருக்க எல்லோருக்கும் அதில் பேரானந்தம். அடுத்து அவள் இயற்கை விவசாயம் செய்ய சென்னையை ஒட்டியே(எங்கனு கேட்கக்கூடாது. அப்பறோம் அதையும் வாங்கி பிளாட் போட்டு வித்திடுவாங்க) ஒரு நிலத்தை வாங்கியிருக்க, இதுவரை செய்த விவசாயத்தால் மண்ணில் ஊறியிருக்கும் செயற்கை உரங்களை மங்கச்செய்ய இரண்டு மூன்று ஆண்டுகள் அப்படியே விட்டுவிடப் பட்டிருக்கிறது.
மொட்டு கன்சீவ் ஆகியிருக்க அனு வேலைக்குச் செல்வதால் வசீகரனை தன்னுடைய பொறுப்பில் எடுத்திருந்தாள் மொட்டு. அன்று மொட்டுவுடன் அமர்ந்து கதைபேசிக்கொண்டிருந்த வசீகரன்,"மொட்டும்மா பாப்பா திரும்ப எப்போ உதைப்பா? தங்கச்சிப்பாப்பா எப்போ வெளிய வருவா?" என்று கேட்க,
"அதெப்படி தங்கச்சி பாப்பானு முடிவு பண்ண? ஒருவேளை தம்பியா இருந்தா?" என்றவளுக்கு,
"இல்ல குஷாப்பா அன்னைக்கு தங்கச்சி பாப்பானு தான் சொன்னாங்க" என்னும் வேளையில் உள்ளே நுழைந்த குஷாவிடம்,
"ஏன் அவனுக்கு தங்கச்சின்னு சொன்ன? ஒருவேளை பையனா இருந்தா பாவம் வசீ வருத்தப்பட மாட்டானா? அவன் பொண்ணு தான் பிறக்கும்னு தீர்க்கமா நம்புறான்... ஏன் இப்படிப் பண்ண?"
"அதெல்லாம் பொண்ணு தான் பயப்படவே பயப்படாத..."
"எப்படிச் சொல்ற?"
"எனக்கு வரிசையா பெண் குழந்தை தான் பிறக்குமாம். நாளைக்கு அவங்களை கல்யாணம் பண்ணிக்கொடுத்து அவங்க புருஷங்க கிட்ட நானும் என் பொண்டாட்டியும் மாட்டிகிட்டு தவிப்போமாம். எனக்கு பல வருஷத்துக்கு முன்னாடியே ஒருத்தி சாபம் கொடுத்திருக்கா..." என்றதும் அந்நாளின் நினைவுக்குச் சென்றவள் அதை எண்ணிச் சிரிக்க,
"ஆனா ஒன்னு, இந்த உலகத்துலயே தனக்குத் தானே சாபம் கொடுத்துகிட்ட ஒரே ஜீவன் நீயாதான் இருப்ப அழகி. நீ எனக்குக் கொடுத்த சாபத்தை என் கூடவே சேர்ந்து நாம அனுபவிப்போமா?" என்று கேட்டான் குஷா.
'அடப்பாவிங்களா! என்னை வெச்சு காமெடி பண்ணறீங்களா? இருங்க உங்க ரெண்டு பேரையும் வெளிய வந்து கவனிச்சுக்குறேன்' என்று சபதமெடுத்த அவர்களின் செல்ல மகளின் அசைவில்,
"வசீ வா பாப்பா உதைக்குறா பாரு..." என்று குஷா மொட்டு இருவரும் ஒருசேர குரல் கொடுத்தார்கள். (நேரம் கைகூடியது!)
பொன்மாலை நேரங்களே!
என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே
தேனாடும் ரோஜாக்களே!
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும்
சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம்
அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே!
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் தர ர ரா த தா
தொடருதே தினம் தினம்
தர ர ரா த தா...
ஒரு வழியா என்னுடைய பதினோராவது கதையா ஆரமிச்சு என் ஒன்பதாவது கதையா இதை முடிச்சிட்டேன்(ரெண்டு கத வௌவ்வால் மாதிரி அந்தரத்துல தொங்குது.) உண்மையைச் சொல்லனும்னா இந்தக் கதை என் பக்கெட் லிஸ்ட்ல இல்லவே இல்லை. திடீர்னு ட்வின்ஸ் கதை எழுதணும்னு யோசிச்சு ஒரு நாலு நாள்ல ஓகே ஆனது தான் இந்தக் கதை. சில கதைகள் எல்லாம் வருஷக்கணக்கா வெய்ட்டிங் லிஸ்ட்ல இருக்கும் போது இதுக்கு நேரம் நல்லா தான் இருக்கு போல!
அடுத்து வரிசையா ஏழு கதைங்க வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு(பாதியில இருப்பதும் சேர்ந்தா ஒன்பது) ஆனா என்கிட்ட நேரம் தான் சுத்தமா இல்ல. இருந்தும் அடுத்த நாலு கதைல ஏதோ ஒன்னு சீக்கிரம் எழுத முயற்சி பண்ணுறேன்.
மைவிடு தூது, mvm, an,(அப்பிரிவேசன் இப்போ சொல்ல முடியாது. டைட்டில் reserved அதான்) விடையில்லா வினா தான் அந்த நாலு கதைங்க. முதல் கதை மெலோட்ராமா. ரெண்டாவது கமர்சியல் திரில்லர், மூணாவது ருசி மாதிரி ஒரு புதிய பிளாட் நாலாவது மர்ம தேசம் மாதிரி அட்வென்சர் மிஸ்டரி கதை. விரைவில் ஏதோ ஒன்னைத் தொடங்குறேன்.
இந்தக் கதையை படித்து ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி. ஒரு உண்மையைச் சொல்லனும்னா இது போல பேமிலி கதை என் ஜானரே கிடையாது. சோ கதை எப்படியிருந்ததுனு சொன்னா(honest reviews are always welcome) என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும். நன்றி!!!