தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 014ன் மனதிலோர் மோகன ராகம் எனது பார்வையில். பல தொழில்கள் நடத்தும் பெரிய நிறுவனத்தின் வாரிசுகள் சத்யா மற்றும் மிருதுவும் பெரியவர்கள் முடிவை மறுக்க காரணம் இல்லாததால் ஒப்புக் கொண்ட திருமணம் மிருதுவின் கனவான வெளியிடத்தில் வைக்க சத்யா ஒப்புக் கொள்ள அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் பல திருமண அமைப்பாளர்களை அதற்காக சந்திக்கிறார்கள். அப்படி அவர்கள் சந்திக்கும் ஷ்ருஷ்டீஸ் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றும் ராகா அவர்களின் வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறாள் என்ற கதைக் களத்தை நேர்த்தியாக தந்திருக்கிறார். ராகா சராசரியான மனிதர்களின் பிரதிநிதியே. நல்லவர் கெட்டவர் என்ற இரு குணங்கள் கலந்த பெண். அதன் சதவீதம் அந்தந்த நிகழ்வுகளை பொறுத்து மாறுபடுகிறது. சத்யாவிடம் மனதை விட்டு தடுமாறி மிருதுவின் நட்பிற்கும் மாறாக அவள் நடப்பதாக உணர்ந்தாலும் முடிவை சத்யாவின் மனதிடமும் திடமும் தீர்மானம் செய்யட்டும் என்று ஒரு கட்டத்தில் விட்டுவிடுகிறாள். சத்யா தன் தொழில்களில் பங்குதாரராக இருக்கும் மிருதுவின் அப்பா உடல் நிலை மற்றும் தொழில் நிலையை கருத்தில் கொண்டானா என்பதை சுவாரசியமாக தந்திருக்கிறார். ஆடம்பரத் திருமணம் குறித்த பல தகவல்களை சுவாரசியமாக கொடுத்திருக்கிறார். சத்யாவின் தடுமாற்றம் சரியே. ராகா இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைய சமுதாயத்தின் பிரதிநிதிதான். தான் எடுத்துக் கொண்ட கதைக் களத்திற்காக பல தகவல்களை தந்து கதையை சரியாக நகர்த்தியிருக்கிறார். வாழ்த்துகள்.