வசீகர வனமாலி – 8
சில விஷயங்கள் நாம் பார்த்து பார்த்து நேர்த்தியாய் செய்தாலும், எது எப்படி நடந்திட வேண்டுமோ அது அப்படியே நடக்கும். சிலது நாம் கண்டுகொள்ளாது போனால் கூட இறுதியில் நம் விருப்பத்தின் பேரில் நடந்தேறும்.. வந்தனா திருமணத்தில் தன் வீட்டினரும் சரி இல்லை கமலியும் சரி யாரும் தேவையில்லாது பிரச்னைகள் கிளப்பக் கூடாது என்றெண்ணியே அனைத்தையும் தன் தோளில் போட்டுக்கொண்டான்.
ஆனால் அதுவே இப்போதும் பெரும் பிரச்சனை ஆனது.. நடப்பதெல்லாம் இயல்பாய் நடக்கிறதா இல்லை கமலி தனக்கேற்றார் போல் சூழல்களை மாற்றிக்கொள்கிறாளா?? இதெல்லாம் ஒன்றும் விளங்கவில்லை. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல, வனமாலி தான் அனைத்துப் பக்கத்திலும் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கல்யாண பத்திரிக்கை கமலியின் பொறுப்பில் இருக்க, கல்யாணத்திற்கு என்று துணிகள் எடுக்கச் சென்றால், அங்கேயே கமலி இருந்தாள், வந்தனா போய் அவளிடம் பேசி ‘வா நீயும் வந்து செலக்ட் பண்ணு...’ என்று அழைக்க,
முரளியின் அம்மாவோ ஒருபடி மேலே போய் சிவகாமிக்கும் கமலிக்கும் புதிய பட்டுப் புடவைகள் எடுத்துக்கொடுக்க, யாராலும் எதுவும் சொல்ல முடியாத ஒரு நிலை.. ஜவுளிக் கடைக்கு அவர்கள் வேலையை வருபவர்களிடம் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுவும் கமலி அவள் மட்டும் வரவில்லை, உடன் ராணியும் அவரின் மகளும் வந்திருந்தனர்.
வந்தனாவும், அவளின் வருங்கால மாமியாரும் அழைக்கையில் கமலி அத்தனை தயங்கினாள் தான்.
“வேண்டாமே வந்தனா.. நீங்க பாருங்க.. நாங்க இப்போ கிளம்பிடுவோம்..” என்றுசொல்லி நகரப் பார்த்தவளை முரளியின் அம்மா தான் வம்படியாய் இழுத்து வந்தார்.
அப்போதும் கூட பட்டும் படாமலும் தான் நின்றிருந்தாள், அவளுக்கு அப்படி சும்மா நிற்பதும் கூட சங்கடமாய் இருக்க, அப்போது தான் அங்கே வனமாலி வந்து சேரவும், அவனைக் கண்டு ‘அப்பாடி...’ என்ற ஒரு நிம்மதி அவள் முகத்தினில் தோன்றி மறைந்தது.
‘இங்கே வா..’ என்பதுபோல் அவனைப் பார்க்க, அவனும் அதை சரியாய் புரிந்து “ஹே கமலி.. நீ எப்போ வந்த??” என்று இயல்பாய் கேட்பதுபோல் கேட்டுக்கொண்டே அவளின் அருகே செல்ல, “நான் கிளம்பறேன் ப்ளீஸ்...” என்றாள் மெதுவாய்..
‘என்னடா அதிசயத்திலும் அதிசயமாய் கெஞ்சுகிறாள்..’ என்று வனமாலி ஆச்சர்மாய் பார்க்க,
“நீங்க அப்புறம் ஷாக் ஆகுங்க.. இப்போ நான் கிளம்பனும்.. அதுக்கொரு வழி பண்ணுங்க.. நான் எந்த ப்ளான்லயும் வரல..” என்று கமலி முணுமுணுக்க,
“ஓ..!! அப்போ ப்ளான் பண்ணி வேற வருவியா??” என்றான் வனமாலி கொஞ்சம் கேலியாய்..
“ஹா ஹா நான் எதுவும் செய்யாம இருக்கும்போதே எல்லாம் நடக்குது.. இதுல ப்ளான் எல்லாம் பண்ணா அவ்வளோதான்... டாமால்.. டுமீல்னு வெடிக்கும்..” என்றவள்,
“இப்போ சொல்லுங்க நான் இருக்கவா இல்லை போகவா???” என, இவர்களின் பேச்சை கோவர்த்தன் ஒருவித வேடிக்கையாய் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவனுக்கு வனமாலியைப் பற்றிய தெரியாதா என்ன?? இதுநாள் வரைக்கும் கூட அவன் கமலியோடு இப்படியெல்லாம் பேசியதில்லை. கமலியும் சரி இவர்கள் இருக்கும் பக்கம் கூட வரமாட்டாள். ஆனால் இப்போதோ எல்லாமே மாறிக்கொண்டு இருக்க, அண்ணனும் கமலியும் பேசுவதைப் பார்க்க அவனுக்கு என்னவோ சுவாரஸ்யமாய் இருந்தது.
வனமாலி பார்த்தவன் “என்னடா பாக்குற..” என,
“ஒன்னுமில்லையே...” என்று கோவர்த்தன் சொல்லும்போதே, வந்தனா “நாங்க பார்த்துட்டு தான் இருக்கோம்..” என்றாள் கேலியாய்..
அதற்குள் முரளியும் “ஆமாமா பார்த்துட்டு தான் மச்சான் இருக்கோம்..” என்று வந்தனா சொல்லியதையே சொல்ல, கமலிக்குப் புரிந்தது எதுவோ கிண்டல் செய்கிறார்கள் என்று.
ஆனால் அவளுக்கு அன்றைய மனநிலை மிக மிக நல்லதொரு நிலையில் இருக்க, சண்டையிடும் எண்ணமோ, இல்லை குதர்க்கம் காட்டும் யோசனையோ இம்மியளவு கூட இல்லை. ஆக அவளுமே கூட வந்தனா முரளியைப் பார்த்துவிட்டு “நீங்க ஏன் எங்களை பாக்கணும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பாக்குறதை விட்டு..” என்று பதிலுக்கு கிண்டல் அடிக்க,
‘பார்ரா...’ என்று பார்த்தது வனமாலியே..
கமலி அழகிதான். அவள் முகத்தில் இருக்கும் புன்னகை அவளை இன்னமும் அழகாய் காட்டியது. கோபம் வருகையில் காளி அவதாரம் என்றாள், புன்னகை சிந்துகையில் மோகினி அவதாரம் போல என்று எண்ணியவனுக்கு ‘வனா....’ என்று அவனின் புத்தி எச்சரிக்கை மணி அடித்தது..
‘சரி சரி...’ என்று அவனே தன்னை சமாளித்துக்கொண்டவன், “உனக்கும் அத்தைக்கும் சேலை பாரு..” என்று சொல்லி பேச்சை மாற்ற,
“அல்ரடி எடுத்து கொடுத்துட்டாங்க...” என்றவள், “வந்து ரொம்ப நேரமாச்சு... எனக்காக அவங்களும் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க..” என்றுசொல்லி ராணியையும் அவரின் மகளையும் காட்ட,
அவர்களைப் பார்த்தவன் “ஓ.. சரி ஆனாலும் பொண்ணு வீட்டு சைட்லயும் டிரஸ் எடுத்துக் கொடுக்கணும்.. உனக்கு நாங்க செலெக்ட் பண்ணா பிடிக்குமோ என்னவோ...” என,
கோவர்த்தன் “அண்ணா இன்னொரு நாள் அந்த ப்ளான் பண்ணலாமே..” என்று அவனும் இவர்களோடு சேர்ந்துவிட்டான்..
கமலியோ சற்றே தள்ளி அமர்ந்து இதெல்லாம் ஒருவித புகைச்சலோடும், எரிச்சலோடும் பார்த்துக்கொண்டு இருந்த மணிராதா, பமீலா, இந்திராவின் முகத்தினைப் பார்த்தவளுக்கு மனதினில் ஒரு திருப்தி தோன்ற,
“ஓ..!! அம்மா கூட சொன்னாங்க வந்தனாக்கு சேலை நகை எல்லாம் எடுக்கணும்னு.. எப்போன்னு ஒரு டைம் சொல்லுங்க எல்லாமே சேர்ந்து வரலாம்..” என்று சற்றே சத்தமாய் சொல்லிவிட்டு, வனமாலியிடம் ஒரு தலையசைப்போடு கிளம்பிவிட்டாள்..
அவள் போன பின்னும் கூட வனமாலி அப்பக்கமே பார்த்துக்கொண்டு இருக்க வந்தனா தான் “போயாச்சு போயாச்சு...” என்று அண்ணனின் தோளைத் தட்ட,
“அடாடா.. ஒன்னுமில்லாததை ஏன் ஊதி கெடுக்கிறீங்க.. என்னவோ நல்ல மூட்ல வந்திருக்கா இல்லை அவ்வளோதான்..” என்றவன் பயந்தது போல் நடிக்க, இவர்களின் இந்த சிரிப்பும் உற்சாகமும் அவர்களின் வீட்டு மற்ற பெண்களுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.
இது மட்டுமென்றில்லை, அடுத்து சில பல நிகழ்வுகளும் இப்படியே கமலியை பொது இடத்தில் பார்க்கும் நிலை ஏற்பட, அது தன்னைப்போல் நடந்ததா இல்லை கமலி தானாக நடத்திக்காட்டினாளா என்று வனமாலிக்கு விளங்கவில்லை.
அவளோடு பேசுகையில் அவள் இயல்பாய் எப்போதும் போல் தான் இருக்கிறாள். ச்சே இவள் மனதில் எதுவுமில்லை எதோ கோவத்தில் அன்று அப்படி சொல்லியிருக்கிறாள் என்று தோன்றும், ஆனால் தனியே சிந்தித்துப் பார்க்கையில், கமலியின் ஒவ்வொரு பார்வைக்கும் சிரிப்புக்கும் வேறொரு அர்த்தம் இருக்கிறதோ என்றும் இருக்கும்..
வீட்டிலோ மகிழ்வாய் இருக்க வேண்டிய நேரமிது, ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை.. மணிராதா கூட மகளின் திருமணம் நல்ல முறையில் நடந்தேற வேண்டும் என்று கொஞ்சம் வாய் மூடி போனார்.
‘எல்லாமே வந்தனா கல்யாணம் வரைக்கும்தான்..’ என்று வீட்டிலும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டார்..
ஆனால் பமீலாவோ “அத்தை இதெல்லாம் இவ வேணும்னே பண்றா.. அதுக்கு வனா மாமாவும் துணை.. இத்தனை நாள் அவங்க இப்படித்தான் பேசிக்கிட்டாங்களா?? இப்போ எல்லாமே புதுசா இருக்கு... அப்போ உங்களுக்கு வேணும்னா அவங்களை சேர்த்துப்பீங்க.. இத்தனை வருசமா உங்களோடவே இருந்த எங்கம்மா என்ன பண்ணுவாங்க??” என்று மணிராதாவை சடைக்க,
அவரோ “வனா.. உன் பொறுப்பு நீ சரியா பண்ணுவன்னு தானே அமைதியா இருக்கேன்.. இப்போ எல்லாமே தப்பு தப்பா நடக்குது.. அந்த கமலி ஏன் எல்லா இடத்துக்கும் வரா..” என்று மகனிடம் மல்லுக்கு நின்றார்.
“ம்மா... நான் போய் கூட்டிட்டு வந்தேனா? இல்லை கமலி வந்து எதுவும் தப்பா பேசி பிரச்சனை இழுக்கிறாளா ?? எதுவுமே இல்லை.. சொல்லப்போனா கமலி ஒதுங்கி தான் போறா.. இப்போ நீங்க எல்லாரும் தான் தேவையில்லாம பேசுறீங்க..” என்று வனமாலி சத்தம் போட்டாலும் மனதில் அவனுக்குமே நிம்மதி குறைந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை என்கையில் அவன் என்னதான் செய்வான்.. வெளி வேலைகள் பார்ப்பானா?? தொழிலை கவனிப்பானா?? கல்யாண வேலைகள் பார்ப்பானா?? இல்லை இந்த பஞ்சாயத்துக்கள் எல்லாம் பேசி முடிப்பானா??
அவன் ஒருவன் என்னதான் செய்ய முடியும்..
இந்த பமீலா செய்வது போதாது என்று இந்திரா வேறு.. இந்திரா ஆரம்பித்தில் இருந்தே மணிராதாவின் கைப் பிள்ளை. இப்போதோ பமீலாவின் பேச்சுக்கள் அவரை சஞ்சலப் படுத்த, அவரின் பதற்றம் கூட ஆரம்பித்தது.
வனமாலியிடமே வந்து “ஏன் வனா நானும் உனக்கு அத்தை தான.. ஆரம்பத்துல இருந்து நம்ம எல்லாம் ஒண்ணாதானே இருக்கோம்.. இப்போ ஏன் எல்லாத்தையும் மாத்தனும்னு நினைக்கிற...” என்று என்னவோ இவன்தான் கமலிக்கு உறுதுணையாய் நின்று அனைத்தும் செய்கிறான் என்பதுபோல் பேச,
அவனுக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சண்டை போடுபவரிடம் சண்டை போடலாம் ஆனால் அழும் நபரிடம் ஆறுதல் சொல்வதுதானே சரி.. அதிலும் இந்திரா, அவனை விட வயதில் மூத்தவர் அழுகையில் அவனுக்கு சங்கடமாய் போனது..
“அத்தை என்ன இதெல்லாம்.. ப்ளீஸ் அழாதீங்க..” என்று அவரை கொஞ்சம் அமைதி படுத்தியவன்,
“ஏன் நீங்க இப்படியெல்லாம் நினைக்கிறீங்க?? நம்ம எல்லாருமே ஒரே குடும்பம் தான்.. மாமா இருந்திருந்தாலும் அதானே செய்வார்..” என்றான் பொறுமையாய்..
“யார் இல்லைன்னு சொன்னா.. ஆனா சிலது எல்லாம் ஒண்ணா இருந்தா ஒத்து வராது வனா.. அவருக்கு ரெண்டு குடும்பம்.. ஆரம்பத்துல இருந்து வேற வேறன்னு இருந்தாச்சு.. இப்போ நீ ஒண்ணு சேர்த்து வைக்க முயற்சி பண்ணாத..” என்றார் மீண்டும் ஒரு அழுகையை ஆரம்பித்து..
நிதானமாய் அவரின் முகம் பார்த்தவன் “ஏன் அத்தை ஒண்ணா இருந்தா என்ன தப்பு?? ஒற்றுமையா இருக்கிறதுல என்ன தப்பு??” என்று அழுத்தம் திருத்தமாய் கேட்க, அவனின் கேள்வியில் கொஞ்சம் திகைத்தவர்,
“அ.. அது.. அதெல்லாம் எதுவும் வேணாம்.. அவங்கவங்க வேலையை மட்டும் பார்த்தா போதும்...” என,
“சரி அப்போ ஏன் பமீலா அவங்க சும்மா இருந்தாலும் இவ்வளோ பேசுறா?? வீட்ல எப்போ பார் சண்டை.. எல்லாம் நீங்களும் பாக்குறீங்க தானே..” என்று வனமாலியும் விடாது பேச, இந்திராவோ ஓரளவுக்கு மேலே திணற ஆரம்பித்தார்.
அவரை பேசு என்று சொன்னதே மணிராதாதான்.. ‘நான் பேசினா அவன் கண்டிப்பா ஏதாவது சொல்லி வாயை அடைப்பான்.. எல்லாத்தையும் விட எனக்கு இப்போ வந்தனா கல்யாணம் முக்கியம். அதுவரைக்கும் நான் எதுவும் பேச முடியாது..’ என்று இந்திராவை பேசு என்று சொல்லியிருந்தார்.
ஆனால் ஒரு அளவுக்கு மேலே, இந்திராவும் பேசத் திணற “என்ன அத்தை பேச்சு வரலியா?? நிதானமா யோசிக்கிறதுக்கு எல்லாம் வருசமும் ஓடிருச்சு. ஆனா இனியாவது கொஞ்சம் எல்லாம் புரிஞ்சு நடந்தா சரி.. சிவகாமி அத்தையும் கமலியும் இந்தளவு பொறுமையா ஒதுங்கிப் போறதே பெரிய விஷயம்..” என்றவன் அமைதியாய் அவரைப் பார்க்க,
இந்திராவோ எப்பதிலும் சொல்லாது எழுந்துப் போனார். கண்டிப்பாய் அவரிடம் பதில் இல்லைதான். ஆரம்பத்தில் இருந்தே, அதாவது மகுடேஸ்வரனுக்கு இவரை இரண்டாம் தாரமாய் பேசியதில் இருந்தே, மணிராதாவின் பேச்சு மட்டுமே இவருக்கு.. அப்படியே ஆகிப்போனது..
‘நான் சொல்றபடி கேட்டுகிட்டே நீ தான் அங்க ராணி...’
‘கொஞ்சம் இடம் விட்டா கூட, உன்ன தொரத்திவிட்டு அந்த சிவகாமி திரும்ப வந்திடுவா...’
சில விஷயங்கள் நாம் பார்த்து பார்த்து நேர்த்தியாய் செய்தாலும், எது எப்படி நடந்திட வேண்டுமோ அது அப்படியே நடக்கும். சிலது நாம் கண்டுகொள்ளாது போனால் கூட இறுதியில் நம் விருப்பத்தின் பேரில் நடந்தேறும்.. வந்தனா திருமணத்தில் தன் வீட்டினரும் சரி இல்லை கமலியும் சரி யாரும் தேவையில்லாது பிரச்னைகள் கிளப்பக் கூடாது என்றெண்ணியே அனைத்தையும் தன் தோளில் போட்டுக்கொண்டான்.
ஆனால் அதுவே இப்போதும் பெரும் பிரச்சனை ஆனது.. நடப்பதெல்லாம் இயல்பாய் நடக்கிறதா இல்லை கமலி தனக்கேற்றார் போல் சூழல்களை மாற்றிக்கொள்கிறாளா?? இதெல்லாம் ஒன்றும் விளங்கவில்லை. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல, வனமாலி தான் அனைத்துப் பக்கத்திலும் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கல்யாண பத்திரிக்கை கமலியின் பொறுப்பில் இருக்க, கல்யாணத்திற்கு என்று துணிகள் எடுக்கச் சென்றால், அங்கேயே கமலி இருந்தாள், வந்தனா போய் அவளிடம் பேசி ‘வா நீயும் வந்து செலக்ட் பண்ணு...’ என்று அழைக்க,
முரளியின் அம்மாவோ ஒருபடி மேலே போய் சிவகாமிக்கும் கமலிக்கும் புதிய பட்டுப் புடவைகள் எடுத்துக்கொடுக்க, யாராலும் எதுவும் சொல்ல முடியாத ஒரு நிலை.. ஜவுளிக் கடைக்கு அவர்கள் வேலையை வருபவர்களிடம் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுவும் கமலி அவள் மட்டும் வரவில்லை, உடன் ராணியும் அவரின் மகளும் வந்திருந்தனர்.
வந்தனாவும், அவளின் வருங்கால மாமியாரும் அழைக்கையில் கமலி அத்தனை தயங்கினாள் தான்.
“வேண்டாமே வந்தனா.. நீங்க பாருங்க.. நாங்க இப்போ கிளம்பிடுவோம்..” என்றுசொல்லி நகரப் பார்த்தவளை முரளியின் அம்மா தான் வம்படியாய் இழுத்து வந்தார்.
அப்போதும் கூட பட்டும் படாமலும் தான் நின்றிருந்தாள், அவளுக்கு அப்படி சும்மா நிற்பதும் கூட சங்கடமாய் இருக்க, அப்போது தான் அங்கே வனமாலி வந்து சேரவும், அவனைக் கண்டு ‘அப்பாடி...’ என்ற ஒரு நிம்மதி அவள் முகத்தினில் தோன்றி மறைந்தது.
‘இங்கே வா..’ என்பதுபோல் அவனைப் பார்க்க, அவனும் அதை சரியாய் புரிந்து “ஹே கமலி.. நீ எப்போ வந்த??” என்று இயல்பாய் கேட்பதுபோல் கேட்டுக்கொண்டே அவளின் அருகே செல்ல, “நான் கிளம்பறேன் ப்ளீஸ்...” என்றாள் மெதுவாய்..
‘என்னடா அதிசயத்திலும் அதிசயமாய் கெஞ்சுகிறாள்..’ என்று வனமாலி ஆச்சர்மாய் பார்க்க,
“நீங்க அப்புறம் ஷாக் ஆகுங்க.. இப்போ நான் கிளம்பனும்.. அதுக்கொரு வழி பண்ணுங்க.. நான் எந்த ப்ளான்லயும் வரல..” என்று கமலி முணுமுணுக்க,
“ஓ..!! அப்போ ப்ளான் பண்ணி வேற வருவியா??” என்றான் வனமாலி கொஞ்சம் கேலியாய்..
“ஹா ஹா நான் எதுவும் செய்யாம இருக்கும்போதே எல்லாம் நடக்குது.. இதுல ப்ளான் எல்லாம் பண்ணா அவ்வளோதான்... டாமால்.. டுமீல்னு வெடிக்கும்..” என்றவள்,
“இப்போ சொல்லுங்க நான் இருக்கவா இல்லை போகவா???” என, இவர்களின் பேச்சை கோவர்த்தன் ஒருவித வேடிக்கையாய் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவனுக்கு வனமாலியைப் பற்றிய தெரியாதா என்ன?? இதுநாள் வரைக்கும் கூட அவன் கமலியோடு இப்படியெல்லாம் பேசியதில்லை. கமலியும் சரி இவர்கள் இருக்கும் பக்கம் கூட வரமாட்டாள். ஆனால் இப்போதோ எல்லாமே மாறிக்கொண்டு இருக்க, அண்ணனும் கமலியும் பேசுவதைப் பார்க்க அவனுக்கு என்னவோ சுவாரஸ்யமாய் இருந்தது.
வனமாலி பார்த்தவன் “என்னடா பாக்குற..” என,
“ஒன்னுமில்லையே...” என்று கோவர்த்தன் சொல்லும்போதே, வந்தனா “நாங்க பார்த்துட்டு தான் இருக்கோம்..” என்றாள் கேலியாய்..
அதற்குள் முரளியும் “ஆமாமா பார்த்துட்டு தான் மச்சான் இருக்கோம்..” என்று வந்தனா சொல்லியதையே சொல்ல, கமலிக்குப் புரிந்தது எதுவோ கிண்டல் செய்கிறார்கள் என்று.
ஆனால் அவளுக்கு அன்றைய மனநிலை மிக மிக நல்லதொரு நிலையில் இருக்க, சண்டையிடும் எண்ணமோ, இல்லை குதர்க்கம் காட்டும் யோசனையோ இம்மியளவு கூட இல்லை. ஆக அவளுமே கூட வந்தனா முரளியைப் பார்த்துவிட்டு “நீங்க ஏன் எங்களை பாக்கணும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பாக்குறதை விட்டு..” என்று பதிலுக்கு கிண்டல் அடிக்க,
‘பார்ரா...’ என்று பார்த்தது வனமாலியே..
கமலி அழகிதான். அவள் முகத்தில் இருக்கும் புன்னகை அவளை இன்னமும் அழகாய் காட்டியது. கோபம் வருகையில் காளி அவதாரம் என்றாள், புன்னகை சிந்துகையில் மோகினி அவதாரம் போல என்று எண்ணியவனுக்கு ‘வனா....’ என்று அவனின் புத்தி எச்சரிக்கை மணி அடித்தது..
‘சரி சரி...’ என்று அவனே தன்னை சமாளித்துக்கொண்டவன், “உனக்கும் அத்தைக்கும் சேலை பாரு..” என்று சொல்லி பேச்சை மாற்ற,
“அல்ரடி எடுத்து கொடுத்துட்டாங்க...” என்றவள், “வந்து ரொம்ப நேரமாச்சு... எனக்காக அவங்களும் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க..” என்றுசொல்லி ராணியையும் அவரின் மகளையும் காட்ட,
அவர்களைப் பார்த்தவன் “ஓ.. சரி ஆனாலும் பொண்ணு வீட்டு சைட்லயும் டிரஸ் எடுத்துக் கொடுக்கணும்.. உனக்கு நாங்க செலெக்ட் பண்ணா பிடிக்குமோ என்னவோ...” என,
கோவர்த்தன் “அண்ணா இன்னொரு நாள் அந்த ப்ளான் பண்ணலாமே..” என்று அவனும் இவர்களோடு சேர்ந்துவிட்டான்..
கமலியோ சற்றே தள்ளி அமர்ந்து இதெல்லாம் ஒருவித புகைச்சலோடும், எரிச்சலோடும் பார்த்துக்கொண்டு இருந்த மணிராதா, பமீலா, இந்திராவின் முகத்தினைப் பார்த்தவளுக்கு மனதினில் ஒரு திருப்தி தோன்ற,
“ஓ..!! அம்மா கூட சொன்னாங்க வந்தனாக்கு சேலை நகை எல்லாம் எடுக்கணும்னு.. எப்போன்னு ஒரு டைம் சொல்லுங்க எல்லாமே சேர்ந்து வரலாம்..” என்று சற்றே சத்தமாய் சொல்லிவிட்டு, வனமாலியிடம் ஒரு தலையசைப்போடு கிளம்பிவிட்டாள்..
அவள் போன பின்னும் கூட வனமாலி அப்பக்கமே பார்த்துக்கொண்டு இருக்க வந்தனா தான் “போயாச்சு போயாச்சு...” என்று அண்ணனின் தோளைத் தட்ட,
“அடாடா.. ஒன்னுமில்லாததை ஏன் ஊதி கெடுக்கிறீங்க.. என்னவோ நல்ல மூட்ல வந்திருக்கா இல்லை அவ்வளோதான்..” என்றவன் பயந்தது போல் நடிக்க, இவர்களின் இந்த சிரிப்பும் உற்சாகமும் அவர்களின் வீட்டு மற்ற பெண்களுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.
இது மட்டுமென்றில்லை, அடுத்து சில பல நிகழ்வுகளும் இப்படியே கமலியை பொது இடத்தில் பார்க்கும் நிலை ஏற்பட, அது தன்னைப்போல் நடந்ததா இல்லை கமலி தானாக நடத்திக்காட்டினாளா என்று வனமாலிக்கு விளங்கவில்லை.
அவளோடு பேசுகையில் அவள் இயல்பாய் எப்போதும் போல் தான் இருக்கிறாள். ச்சே இவள் மனதில் எதுவுமில்லை எதோ கோவத்தில் அன்று அப்படி சொல்லியிருக்கிறாள் என்று தோன்றும், ஆனால் தனியே சிந்தித்துப் பார்க்கையில், கமலியின் ஒவ்வொரு பார்வைக்கும் சிரிப்புக்கும் வேறொரு அர்த்தம் இருக்கிறதோ என்றும் இருக்கும்..
வீட்டிலோ மகிழ்வாய் இருக்க வேண்டிய நேரமிது, ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை.. மணிராதா கூட மகளின் திருமணம் நல்ல முறையில் நடந்தேற வேண்டும் என்று கொஞ்சம் வாய் மூடி போனார்.
‘எல்லாமே வந்தனா கல்யாணம் வரைக்கும்தான்..’ என்று வீட்டிலும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டார்..
ஆனால் பமீலாவோ “அத்தை இதெல்லாம் இவ வேணும்னே பண்றா.. அதுக்கு வனா மாமாவும் துணை.. இத்தனை நாள் அவங்க இப்படித்தான் பேசிக்கிட்டாங்களா?? இப்போ எல்லாமே புதுசா இருக்கு... அப்போ உங்களுக்கு வேணும்னா அவங்களை சேர்த்துப்பீங்க.. இத்தனை வருசமா உங்களோடவே இருந்த எங்கம்மா என்ன பண்ணுவாங்க??” என்று மணிராதாவை சடைக்க,
அவரோ “வனா.. உன் பொறுப்பு நீ சரியா பண்ணுவன்னு தானே அமைதியா இருக்கேன்.. இப்போ எல்லாமே தப்பு தப்பா நடக்குது.. அந்த கமலி ஏன் எல்லா இடத்துக்கும் வரா..” என்று மகனிடம் மல்லுக்கு நின்றார்.
“ம்மா... நான் போய் கூட்டிட்டு வந்தேனா? இல்லை கமலி வந்து எதுவும் தப்பா பேசி பிரச்சனை இழுக்கிறாளா ?? எதுவுமே இல்லை.. சொல்லப்போனா கமலி ஒதுங்கி தான் போறா.. இப்போ நீங்க எல்லாரும் தான் தேவையில்லாம பேசுறீங்க..” என்று வனமாலி சத்தம் போட்டாலும் மனதில் அவனுக்குமே நிம்மதி குறைந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை என்கையில் அவன் என்னதான் செய்வான்.. வெளி வேலைகள் பார்ப்பானா?? தொழிலை கவனிப்பானா?? கல்யாண வேலைகள் பார்ப்பானா?? இல்லை இந்த பஞ்சாயத்துக்கள் எல்லாம் பேசி முடிப்பானா??
அவன் ஒருவன் என்னதான் செய்ய முடியும்..
இந்த பமீலா செய்வது போதாது என்று இந்திரா வேறு.. இந்திரா ஆரம்பித்தில் இருந்தே மணிராதாவின் கைப் பிள்ளை. இப்போதோ பமீலாவின் பேச்சுக்கள் அவரை சஞ்சலப் படுத்த, அவரின் பதற்றம் கூட ஆரம்பித்தது.
வனமாலியிடமே வந்து “ஏன் வனா நானும் உனக்கு அத்தை தான.. ஆரம்பத்துல இருந்து நம்ம எல்லாம் ஒண்ணாதானே இருக்கோம்.. இப்போ ஏன் எல்லாத்தையும் மாத்தனும்னு நினைக்கிற...” என்று என்னவோ இவன்தான் கமலிக்கு உறுதுணையாய் நின்று அனைத்தும் செய்கிறான் என்பதுபோல் பேச,
அவனுக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சண்டை போடுபவரிடம் சண்டை போடலாம் ஆனால் அழும் நபரிடம் ஆறுதல் சொல்வதுதானே சரி.. அதிலும் இந்திரா, அவனை விட வயதில் மூத்தவர் அழுகையில் அவனுக்கு சங்கடமாய் போனது..
“அத்தை என்ன இதெல்லாம்.. ப்ளீஸ் அழாதீங்க..” என்று அவரை கொஞ்சம் அமைதி படுத்தியவன்,
“ஏன் நீங்க இப்படியெல்லாம் நினைக்கிறீங்க?? நம்ம எல்லாருமே ஒரே குடும்பம் தான்.. மாமா இருந்திருந்தாலும் அதானே செய்வார்..” என்றான் பொறுமையாய்..
“யார் இல்லைன்னு சொன்னா.. ஆனா சிலது எல்லாம் ஒண்ணா இருந்தா ஒத்து வராது வனா.. அவருக்கு ரெண்டு குடும்பம்.. ஆரம்பத்துல இருந்து வேற வேறன்னு இருந்தாச்சு.. இப்போ நீ ஒண்ணு சேர்த்து வைக்க முயற்சி பண்ணாத..” என்றார் மீண்டும் ஒரு அழுகையை ஆரம்பித்து..
நிதானமாய் அவரின் முகம் பார்த்தவன் “ஏன் அத்தை ஒண்ணா இருந்தா என்ன தப்பு?? ஒற்றுமையா இருக்கிறதுல என்ன தப்பு??” என்று அழுத்தம் திருத்தமாய் கேட்க, அவனின் கேள்வியில் கொஞ்சம் திகைத்தவர்,
“அ.. அது.. அதெல்லாம் எதுவும் வேணாம்.. அவங்கவங்க வேலையை மட்டும் பார்த்தா போதும்...” என,
“சரி அப்போ ஏன் பமீலா அவங்க சும்மா இருந்தாலும் இவ்வளோ பேசுறா?? வீட்ல எப்போ பார் சண்டை.. எல்லாம் நீங்களும் பாக்குறீங்க தானே..” என்று வனமாலியும் விடாது பேச, இந்திராவோ ஓரளவுக்கு மேலே திணற ஆரம்பித்தார்.
அவரை பேசு என்று சொன்னதே மணிராதாதான்.. ‘நான் பேசினா அவன் கண்டிப்பா ஏதாவது சொல்லி வாயை அடைப்பான்.. எல்லாத்தையும் விட எனக்கு இப்போ வந்தனா கல்யாணம் முக்கியம். அதுவரைக்கும் நான் எதுவும் பேச முடியாது..’ என்று இந்திராவை பேசு என்று சொல்லியிருந்தார்.
ஆனால் ஒரு அளவுக்கு மேலே, இந்திராவும் பேசத் திணற “என்ன அத்தை பேச்சு வரலியா?? நிதானமா யோசிக்கிறதுக்கு எல்லாம் வருசமும் ஓடிருச்சு. ஆனா இனியாவது கொஞ்சம் எல்லாம் புரிஞ்சு நடந்தா சரி.. சிவகாமி அத்தையும் கமலியும் இந்தளவு பொறுமையா ஒதுங்கிப் போறதே பெரிய விஷயம்..” என்றவன் அமைதியாய் அவரைப் பார்க்க,
இந்திராவோ எப்பதிலும் சொல்லாது எழுந்துப் போனார். கண்டிப்பாய் அவரிடம் பதில் இல்லைதான். ஆரம்பத்தில் இருந்தே, அதாவது மகுடேஸ்வரனுக்கு இவரை இரண்டாம் தாரமாய் பேசியதில் இருந்தே, மணிராதாவின் பேச்சு மட்டுமே இவருக்கு.. அப்படியே ஆகிப்போனது..
‘நான் சொல்றபடி கேட்டுகிட்டே நீ தான் அங்க ராணி...’
‘கொஞ்சம் இடம் விட்டா கூட, உன்ன தொரத்திவிட்டு அந்த சிவகாமி திரும்ப வந்திடுவா...’