பூ 3:
அன்று மாலை தொழில் முறைக் கூட்டம் மற்றும் ஒரு விருந்து ஏற்பாடாகியிருந்தது.அதில் கலந்து கொள்வதற்காக, அலுவலகத்தில் இருந்து நேரத்திற்கே கிளம்பியிருந்தான் விஜய். அவனுடன் வருவதாய் சொன்ன பிரவீன் இன்னும் வந்தபாடில்லை.
“என்ன ரஞ்சன்..? பிரவீன் வந்தாச்சா..?” என்றான்.
“இன்னும் இல்லை சார்...!”
“இன்னும் என்ன பண்றான். டைம் ஆச்சு..!” என்றான்.
விஜய்யின் கார் நண்பனின் வருகைக்காக, அவர்கள் கம்பெனி வாசலில் நின்றிருந்தது. அதாவது விஷ்வ துளசியின் அலுவலகத்தின் முன்பு. சென்னையில் இருந்து வந்த பிரவீன், நேராக அங்கு வந்து விட்டான்.
விஜய் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, சிரித்த முகத்துடன் வந்தான் பிரவீன்.
“ஹாய் விஜய்..!” என்றபடி அவன் காரில் ஏற, அவனைப் பார்த்து முறைத்தான் விஜய்.
“எவ்வளவு நேரம் வெயிட் பண்றது பிரவீன்..?” என்று விஜய் சிடுசிடுக்க,
“சாரி மாப்பிள்ளை...! ஒரு முக்கியமான பைல். அதை விஷ்வாகிட்ட குடுத்துட்டு வர லேட் ஆகிடுச்சு...!” என்றான்.
“வீட்டுக்கு போனியா இல்லையா..?” என்றான் விஜய்.
“எங்க...? நேரா இங்க தான் வந்தேன். மீட்டிங்க முடிச்சுட்டு வீட்டுக்கு போய்க்கலாம்ன்னு இருந்துட்டேன்..!” என்றான் பிரவீன்.
ரஞ்சன் இவர்கள் இருவரையும் வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களின் பிணைப்பு அப்படி. எவ்வளவு பிரச்சனைகள் நடந்தாலும், இன்று வரை இவர்கள் மட்டும் பிரியவேயில்லை. துளசியிடம் ஒரு நாள் கூட விஜய்யை விட்டுக் கொடுத்து பேசியது இல்லை. அதே போல் விஜய்யிடம்,துளசியையும் விட்டுக் கொடுத்துப் பேசியதில்லை. பிரவீன் சிறந்த அண்ணன், அதே சமயம் நல்ல நண்பன்.
“அப்பறம் உன்னோட பிராஜெக்ட் என்ன ஆச்சு..?” என்றான் பிரவீன்.
“சார் ஒரு விஷயத்தைத் தொட்டாலே அது சக்சஸ் தான். அதே மாதிரி தான் இன்னைக்கும் நடந்தது. சக்சஸ்..” என்று ரஞ்சன் முந்திக் கொண்டு சொல்ல, அவனை முறைத்தான் விஜய்.
“சென்னைக்கு போன விஷயம் என்ன ஆச்சு..?” என்றான் விஜய் முகத்தை சீரியசாய் வைத்துக் கொண்டு.
“எங்க...? இப்ப முடியும்ன்னு தோணலை..! பார்ப்போம்..” என்று மழுப்பினான் பிரவீன்.அதற்குள் அவர்கள் செல்ல வேண்டிய இடமும் வந்து விட, விஜய்யும் அப்போதைக்கு அந்த பேச்சை விட்டான்.
அந்த கூட்டத்தில் பலதரப்பட்ட தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கியவர்களும் இருக்க, விஜய்யை மட்டும் சில கண்கள் உற்று நோக்கிக் கொண்டிருந்தன.
கருப்பு நிற ஷிவான் புடவையில் ஒயிலாக வந்து கொண்டிருந்தாள் திவ்யா. அவளுடன் சேர்ந்து விமலும் மிடுக்காக வந்து கொண்டிருந்தான். ஒரு நிமிடம் அனைவரும் அவளை வியந்து பார்க்க, விஜய்யின் கண்களும் ஒரு நிமிடம் அவளைப் பார்த்து மீண்டது.ஆனால் பிரவீனுக்கோ, அவளை அங்கு பார்த்ததும் ஒரு சிறிய யோசனை.
விருந்து ஆரம்பமாக, திவ்யாவோ ஓரக்கண்ணால் விஜய்யை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்ப எதுக்கு அவனையேப் பார்த்துட்டு இருக்க...?” என்றான் விமல் கோபமாய்.
“அவன் பார்க்குற மாதிரி இருக்குறான் பார்க்குறேன். பாரு, எவ்வளவு ஹேன்ட்சம்மா...சும்மா ஜம்முன்னு இருக்கான்னு...” என்றாள், கையில் இருந்த பழரசத்தை அருந்திக் கொண்டே.
“உன்னோட போக்கு எனக்கு சரியாப் படலை திவ்யா....?” என்று எச்சரித்தான் விமல். அதையெல்லாம் அவள் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.
தன்னை உற்று நோக்கும் கண்களை திரும்பாலேயே உணர்ந்து கொண்டான் விஜய். திரும்பிப் பார்க்கவும் முயற்சி செய்யவில்லை. அவன் கையில் இருந்த போனில் சற்று முன் தான் செல்பி எடுத்திருந்தான். அதில் பதிந்திருந்த அந்த இருவரையும் தான், ஜூம் செய்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“யார் இவங்க...? இவ பார்க்குற பார்வையே சரியில்லையே..?” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க,
“என்ன யோசிக்கிற விஜய்..?” என்றான் பிரவீன்.
“ஒண்ணுமில்லை பிரவீன்..!” என்பதோடு முடித்துக் கொள்ள, சுற்றி இருந்தவர்களின் கண்கள், தூரத்தை ஆவலாய் பார்க்க, நிமிர்ந்து பார்க்காமலேயே அவனுக்குத் தெரிந்தது வருவது யாரென்று.
விஷ்வ துளசி தான் சுரேஷுடன் வந்து கொண்டிருந்தாள்.அவள் சேலையெல்லாம் அணிந்து வரவில்லை. அங்கே ஆண்கள் எப்படி இருந்தனரோ அப்படியே அவளும் இருந்தாள்.கோட்,சூட் சகிதம் வந்தளைப் பார்த்து, அனைவரும் வாய் பிளந்து தான் போயினர்.
“துளசி வரேன்னு சொல்லவேயில்லையே...?” என்று பிரவீன் மனதிற்குள் யோசிக்க, விஜய்யோ அவள் நடந்து வரும் கம்பீரத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வை, அவளைப் பார்த்துக் கொண்டே, கையில் இருந்த பழரசத்தை அருந்த, அதை நிமிடத்தில் கண்டு கொண்டான் பிரவீன்.
“விஜய்..! அது என் தங்கச்சி...!” என்றான் கோபமாக.
“யார் இல்லைன்னு சொன்னா...? எனக்கு அத்தை மகன்னு கூட சொல்லலாம். சும்மா சொல்லக் கூடாது, உன் தங்கச்சி செம்ம பிகர்...என்ன..? இந்த அச்சம், மடம் இது மட்டும் தான் இல்லை..!” என்றான், எதையும் முகத்தில் காட்டாத குரலில்.
“நீ, இப்ப சொன்னது மட்டும் அவ காதுல விழுந்தது...மவனே நீ காலி..!” என்றான் பிரவீன்.
“அப்படியா...? எங்க அவளை ஒரு நிமிஷம் என் முன்னாடி நின்னு, என்னைப் பார்க்க சொல்லு பார்ப்போம்..!” என்றான் சவாலாய்.
அது மட்டும் அவளால் முடியாது. எப்போதும் அவன் முகத்தை அவள் பார்ப்பது கிடையாது. அதற்கு வெட்கம், தயக்கம் என்று அவன் நினைத்திருக்க, அதற்கான காரணம் அவனைத் தவிர அனைவரும் அறிந்த ஒரு காரணம்.அதையெல்லாம் விஜய்யிடம் சொல்லும் நிலையில் பிரவீன் இல்லை.
“என்ன விஜய்...? நீங்க ரெண்டு பேரும் எப்ப வந்திங்க..?” என்றார் சுரேஷ்.
“இப்போ தான் மாமா...ஜஸ்ட் ஹாப்னார்...”என்றான். துளசியோ அவனைக் கண்டு கொள்ளவே இல்லை. மிடுக்காகவே நின்றிருந்தாள்.
“இது யாரு...? இவ்வளவு திமிரா நிக்கிறா...?” என்றாள் திவ்யா யோசனையுடன்.
“அது தெரிஞ்சு என்ன செய்ய போற...?” என்று விமல் கேட்க,
“கேட்ட கேள்விக்குப் பதில்..” என்றாள்.
“அவ பேரு விஷ்வ துளசி. அவனோட அத்தை பொண்ணு. நீ பார்க்கனும்ன்னு சொல்லிட்டு இருந்தியே அவ தான் இவ..!” என்றான் விமல் அசட்டையாக.
“பார்க்க ஹாட் பிகராத்தான் இருக்கா..? அப்பறம் எப்படி..?” என்று அவள் ஏதே கேட்க வர, அதற்குள் ஒருவர் அவர்களின் அருகில் வந்து பேச்சுக் கொடுக்க, திவ்யாவின் பேச்சு அப்படியே நின்றது.
விஜய் மொபைலில் பேசிக்கொண்டு, அங்கிருந்து நகர, அவனைப் பார்க்காததைப் போல் பார்த்த துளசி, மனதிற்குள் கறுவினாள்.
“இவனும் இவன் மூஞ்சியும். கருவாடு மாதிரி இருக்குறவனுக்கு கோட், சூட் வேற...!” என்று கருவ,
“அவனைப் பார்த்தா..கருவாடு மாதிரியா இருக்கு..? நல்லாப் பார்த்து சொல்லு...” என்று அவளின் மனசாட்சி கிண்டல் அடித்துக் கொண்டிருந்தது.
“ஹெல்லோ மிஸ் திவ்யா..!ஹாய் மிஸ்டர் விமல்..!” என்ற சுரேஷின் குரலில் திரும்பினாள் விஷ்வ துளசி.
திவ்யா கொஞ்சம் யோசிக்க,
“நீங்க மினிஸ்டர் கனகவேல் டாட்டர் தானே...? நீங்க எப்படி இங்க...? அப்பா வரலையா..?” என்றார் வரிசையாக.
“ஹாய் அங்கிள்..டாடி கட்சி ஆபீஸ் போயிருக்கார். சோ நாங்க பார்ட்டியை அட்டென் பண்ண வந்தோம்..!” என்றவள், விமலை ஓரக்கண்ணால் பார்த்து ஜாடை செய்ய,
“ஆமா அங்கிள்..! சித்தப்பாக்கு முக்கியமான வேலை..” என்றான் சமாளிப்பாக.
“உங்களுக்கு டாடியைத் தெரியுமா...?” என்றாள் திவ்யா.
“என்னம்மா இப்படி கேட்டுட்டே...அவரைத் தெரியாதவங்க இருக்க முடியுமா..? பைதி வே...ஷீ ஸ் மை டாட்டர் விஷ்வ துளசி..!” என்று அறிமுகப்படுத்தினார் சுரேஷ்.
அதுவரை அமைதியாக இருந்த துளசி, தன்னுடைய லேசர் கண்களால் திவ்யாவை எடை போட்டாள்.
“ஹாய் துளசி..! ஐ ஆம் திவ்யா...” என்றபடி திவ்யா கையை நீட்ட, அவளை யோசனையுடன் பார்த்தபடியே கை குலுக்கினாள் துளசி.
“பெரிய இவ...வாயைத் திறந்து பேசமாட்டாளோ..” என்று மனதிற்குள் கருவிக் கொண்டாள் திவ்யா.
“ஓகே டாடி...! கிளம்பலாமா..?” என்றாள் துளசி.
“நீ பிரவீன் கூட போய்டுமா.எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு..!” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, துளசியோ மறுப்பு சொல்வதற்குள், அவர் பிரவீனை அழைத்திருந்தார்.
அன்று மாலை தொழில் முறைக் கூட்டம் மற்றும் ஒரு விருந்து ஏற்பாடாகியிருந்தது.அதில் கலந்து கொள்வதற்காக, அலுவலகத்தில் இருந்து நேரத்திற்கே கிளம்பியிருந்தான் விஜய். அவனுடன் வருவதாய் சொன்ன பிரவீன் இன்னும் வந்தபாடில்லை.
“என்ன ரஞ்சன்..? பிரவீன் வந்தாச்சா..?” என்றான்.
“இன்னும் இல்லை சார்...!”
“இன்னும் என்ன பண்றான். டைம் ஆச்சு..!” என்றான்.
விஜய்யின் கார் நண்பனின் வருகைக்காக, அவர்கள் கம்பெனி வாசலில் நின்றிருந்தது. அதாவது விஷ்வ துளசியின் அலுவலகத்தின் முன்பு. சென்னையில் இருந்து வந்த பிரவீன், நேராக அங்கு வந்து விட்டான்.
விஜய் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, சிரித்த முகத்துடன் வந்தான் பிரவீன்.
“ஹாய் விஜய்..!” என்றபடி அவன் காரில் ஏற, அவனைப் பார்த்து முறைத்தான் விஜய்.
“எவ்வளவு நேரம் வெயிட் பண்றது பிரவீன்..?” என்று விஜய் சிடுசிடுக்க,
“சாரி மாப்பிள்ளை...! ஒரு முக்கியமான பைல். அதை விஷ்வாகிட்ட குடுத்துட்டு வர லேட் ஆகிடுச்சு...!” என்றான்.
“வீட்டுக்கு போனியா இல்லையா..?” என்றான் விஜய்.
“எங்க...? நேரா இங்க தான் வந்தேன். மீட்டிங்க முடிச்சுட்டு வீட்டுக்கு போய்க்கலாம்ன்னு இருந்துட்டேன்..!” என்றான் பிரவீன்.
ரஞ்சன் இவர்கள் இருவரையும் வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களின் பிணைப்பு அப்படி. எவ்வளவு பிரச்சனைகள் நடந்தாலும், இன்று வரை இவர்கள் மட்டும் பிரியவேயில்லை. துளசியிடம் ஒரு நாள் கூட விஜய்யை விட்டுக் கொடுத்து பேசியது இல்லை. அதே போல் விஜய்யிடம்,துளசியையும் விட்டுக் கொடுத்துப் பேசியதில்லை. பிரவீன் சிறந்த அண்ணன், அதே சமயம் நல்ல நண்பன்.
“அப்பறம் உன்னோட பிராஜெக்ட் என்ன ஆச்சு..?” என்றான் பிரவீன்.
“சார் ஒரு விஷயத்தைத் தொட்டாலே அது சக்சஸ் தான். அதே மாதிரி தான் இன்னைக்கும் நடந்தது. சக்சஸ்..” என்று ரஞ்சன் முந்திக் கொண்டு சொல்ல, அவனை முறைத்தான் விஜய்.
“சென்னைக்கு போன விஷயம் என்ன ஆச்சு..?” என்றான் விஜய் முகத்தை சீரியசாய் வைத்துக் கொண்டு.
“எங்க...? இப்ப முடியும்ன்னு தோணலை..! பார்ப்போம்..” என்று மழுப்பினான் பிரவீன்.அதற்குள் அவர்கள் செல்ல வேண்டிய இடமும் வந்து விட, விஜய்யும் அப்போதைக்கு அந்த பேச்சை விட்டான்.
அந்த கூட்டத்தில் பலதரப்பட்ட தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கியவர்களும் இருக்க, விஜய்யை மட்டும் சில கண்கள் உற்று நோக்கிக் கொண்டிருந்தன.
கருப்பு நிற ஷிவான் புடவையில் ஒயிலாக வந்து கொண்டிருந்தாள் திவ்யா. அவளுடன் சேர்ந்து விமலும் மிடுக்காக வந்து கொண்டிருந்தான். ஒரு நிமிடம் அனைவரும் அவளை வியந்து பார்க்க, விஜய்யின் கண்களும் ஒரு நிமிடம் அவளைப் பார்த்து மீண்டது.ஆனால் பிரவீனுக்கோ, அவளை அங்கு பார்த்ததும் ஒரு சிறிய யோசனை.
விருந்து ஆரம்பமாக, திவ்யாவோ ஓரக்கண்ணால் விஜய்யை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்ப எதுக்கு அவனையேப் பார்த்துட்டு இருக்க...?” என்றான் விமல் கோபமாய்.
“அவன் பார்க்குற மாதிரி இருக்குறான் பார்க்குறேன். பாரு, எவ்வளவு ஹேன்ட்சம்மா...சும்மா ஜம்முன்னு இருக்கான்னு...” என்றாள், கையில் இருந்த பழரசத்தை அருந்திக் கொண்டே.
“உன்னோட போக்கு எனக்கு சரியாப் படலை திவ்யா....?” என்று எச்சரித்தான் விமல். அதையெல்லாம் அவள் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.
தன்னை உற்று நோக்கும் கண்களை திரும்பாலேயே உணர்ந்து கொண்டான் விஜய். திரும்பிப் பார்க்கவும் முயற்சி செய்யவில்லை. அவன் கையில் இருந்த போனில் சற்று முன் தான் செல்பி எடுத்திருந்தான். அதில் பதிந்திருந்த அந்த இருவரையும் தான், ஜூம் செய்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“யார் இவங்க...? இவ பார்க்குற பார்வையே சரியில்லையே..?” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க,
“என்ன யோசிக்கிற விஜய்..?” என்றான் பிரவீன்.
“ஒண்ணுமில்லை பிரவீன்..!” என்பதோடு முடித்துக் கொள்ள, சுற்றி இருந்தவர்களின் கண்கள், தூரத்தை ஆவலாய் பார்க்க, நிமிர்ந்து பார்க்காமலேயே அவனுக்குத் தெரிந்தது வருவது யாரென்று.
விஷ்வ துளசி தான் சுரேஷுடன் வந்து கொண்டிருந்தாள்.அவள் சேலையெல்லாம் அணிந்து வரவில்லை. அங்கே ஆண்கள் எப்படி இருந்தனரோ அப்படியே அவளும் இருந்தாள்.கோட்,சூட் சகிதம் வந்தளைப் பார்த்து, அனைவரும் வாய் பிளந்து தான் போயினர்.
“துளசி வரேன்னு சொல்லவேயில்லையே...?” என்று பிரவீன் மனதிற்குள் யோசிக்க, விஜய்யோ அவள் நடந்து வரும் கம்பீரத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வை, அவளைப் பார்த்துக் கொண்டே, கையில் இருந்த பழரசத்தை அருந்த, அதை நிமிடத்தில் கண்டு கொண்டான் பிரவீன்.
“விஜய்..! அது என் தங்கச்சி...!” என்றான் கோபமாக.
“யார் இல்லைன்னு சொன்னா...? எனக்கு அத்தை மகன்னு கூட சொல்லலாம். சும்மா சொல்லக் கூடாது, உன் தங்கச்சி செம்ம பிகர்...என்ன..? இந்த அச்சம், மடம் இது மட்டும் தான் இல்லை..!” என்றான், எதையும் முகத்தில் காட்டாத குரலில்.
“நீ, இப்ப சொன்னது மட்டும் அவ காதுல விழுந்தது...மவனே நீ காலி..!” என்றான் பிரவீன்.
“அப்படியா...? எங்க அவளை ஒரு நிமிஷம் என் முன்னாடி நின்னு, என்னைப் பார்க்க சொல்லு பார்ப்போம்..!” என்றான் சவாலாய்.
அது மட்டும் அவளால் முடியாது. எப்போதும் அவன் முகத்தை அவள் பார்ப்பது கிடையாது. அதற்கு வெட்கம், தயக்கம் என்று அவன் நினைத்திருக்க, அதற்கான காரணம் அவனைத் தவிர அனைவரும் அறிந்த ஒரு காரணம்.அதையெல்லாம் விஜய்யிடம் சொல்லும் நிலையில் பிரவீன் இல்லை.
“என்ன விஜய்...? நீங்க ரெண்டு பேரும் எப்ப வந்திங்க..?” என்றார் சுரேஷ்.
“இப்போ தான் மாமா...ஜஸ்ட் ஹாப்னார்...”என்றான். துளசியோ அவனைக் கண்டு கொள்ளவே இல்லை. மிடுக்காகவே நின்றிருந்தாள்.
“இது யாரு...? இவ்வளவு திமிரா நிக்கிறா...?” என்றாள் திவ்யா யோசனையுடன்.
“அது தெரிஞ்சு என்ன செய்ய போற...?” என்று விமல் கேட்க,
“கேட்ட கேள்விக்குப் பதில்..” என்றாள்.
“அவ பேரு விஷ்வ துளசி. அவனோட அத்தை பொண்ணு. நீ பார்க்கனும்ன்னு சொல்லிட்டு இருந்தியே அவ தான் இவ..!” என்றான் விமல் அசட்டையாக.
“பார்க்க ஹாட் பிகராத்தான் இருக்கா..? அப்பறம் எப்படி..?” என்று அவள் ஏதே கேட்க வர, அதற்குள் ஒருவர் அவர்களின் அருகில் வந்து பேச்சுக் கொடுக்க, திவ்யாவின் பேச்சு அப்படியே நின்றது.
விஜய் மொபைலில் பேசிக்கொண்டு, அங்கிருந்து நகர, அவனைப் பார்க்காததைப் போல் பார்த்த துளசி, மனதிற்குள் கறுவினாள்.
“இவனும் இவன் மூஞ்சியும். கருவாடு மாதிரி இருக்குறவனுக்கு கோட், சூட் வேற...!” என்று கருவ,
“அவனைப் பார்த்தா..கருவாடு மாதிரியா இருக்கு..? நல்லாப் பார்த்து சொல்லு...” என்று அவளின் மனசாட்சி கிண்டல் அடித்துக் கொண்டிருந்தது.
“ஹெல்லோ மிஸ் திவ்யா..!ஹாய் மிஸ்டர் விமல்..!” என்ற சுரேஷின் குரலில் திரும்பினாள் விஷ்வ துளசி.
திவ்யா கொஞ்சம் யோசிக்க,
“நீங்க மினிஸ்டர் கனகவேல் டாட்டர் தானே...? நீங்க எப்படி இங்க...? அப்பா வரலையா..?” என்றார் வரிசையாக.
“ஹாய் அங்கிள்..டாடி கட்சி ஆபீஸ் போயிருக்கார். சோ நாங்க பார்ட்டியை அட்டென் பண்ண வந்தோம்..!” என்றவள், விமலை ஓரக்கண்ணால் பார்த்து ஜாடை செய்ய,
“ஆமா அங்கிள்..! சித்தப்பாக்கு முக்கியமான வேலை..” என்றான் சமாளிப்பாக.
“உங்களுக்கு டாடியைத் தெரியுமா...?” என்றாள் திவ்யா.
“என்னம்மா இப்படி கேட்டுட்டே...அவரைத் தெரியாதவங்க இருக்க முடியுமா..? பைதி வே...ஷீ ஸ் மை டாட்டர் விஷ்வ துளசி..!” என்று அறிமுகப்படுத்தினார் சுரேஷ்.
அதுவரை அமைதியாக இருந்த துளசி, தன்னுடைய லேசர் கண்களால் திவ்யாவை எடை போட்டாள்.
“ஹாய் துளசி..! ஐ ஆம் திவ்யா...” என்றபடி திவ்யா கையை நீட்ட, அவளை யோசனையுடன் பார்த்தபடியே கை குலுக்கினாள் துளசி.
“பெரிய இவ...வாயைத் திறந்து பேசமாட்டாளோ..” என்று மனதிற்குள் கருவிக் கொண்டாள் திவ்யா.
“ஓகே டாடி...! கிளம்பலாமா..?” என்றாள் துளசி.
“நீ பிரவீன் கூட போய்டுமா.எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு..!” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, துளசியோ மறுப்பு சொல்வதற்குள், அவர் பிரவீனை அழைத்திருந்தார்.